தமிழரும் மேலாண்மையும் – சிறப்புரை – முனைவர் ஆ.மணவழகன்

தமிழரும் மேலாண்மையும் 

சிறப்புரை – முனைவர் ஆ.மணவழகன்

22.03.2024

வடசென்னை பகுதியில் பரந்த வளாகத்தில் அமைந்துள்ளது #பாரதி_மகளிர்_கல்லூரி (தன்னாட்சி).

அப்பகுதி மாணவியர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும் இங்குப் பயில்கின்றனர். தமிழியலில் இளங்கலைத் தொடங்கி முனைவர் பட்டம் வரைப் பயில இங்கு வாய்ப்புகள் உள்ளன. பெண் பிள்ளைகளுக்கு இதுவொரு வேடந்தாங்கல்.

22.03.24 அன்று இக்கல்லூரில் #முத்தமிழ்_விழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில்
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள், #தமிழரும்_மேலாண்மையும் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

குறிப்பாக, பழந்தமிழருடைய மேலாண்மைச் செயல்பாடுகளில் மகளிரின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார். உரையை, மாணவியர் மிகுந்த ஆர்வமுடன் கேட்டனர். நிகழ்வின் இறுதியின் மாணவியர் பலரும் அவர்கள் பகுதியில் காணப்படும் தொன்மையான நீர்மேலாண்மைத் திட்டங்கள், தொல்பொருள் களங்கள் போன்றவை குறித்து ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்விற்குத் தலைமையேற்ற முதல்வர் முனைவர் கே.கிளாடிஸ் அவர்கள், “தமிழ் இலக்கியங்களில் மேலாண்மை குறித்து இத்தனை செய்திகளும் சிந்தனைகளும் திட்டங்களும் இருக்கின்றன என்பதை அறிந்து மிகவும் வியந்து போனேன்; நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். இது குறித்து தொடர்ந்து ஆய்வுகளும் திட்டங்களும் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். எங்கள் மாணவியரையும் இவ்வகையில் ஊக்குவிக்க முயற்சி செய்வோம்” என்றார்.

நிகழ்வினைத் தமிழ்த்துறையின் தலைவர் கவிஞர் முனைவர் ப.கல்பனா அவர்களின் தலைமையிலான தமிழ்த்துறை சிறந்த முறையில் ஒருங்கிணைப்புச் செய்திருந்தது.

 

admin

ஆய்வாளர், பேராசிரியர், கவிஞர்.

Recent posts

error: Content is protected !!